படுகொலை செய்யப்பட்ட பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரன் உட்பட கொலையுண்;ட எமது மக்கள் அனைவரினது தொடர்பிலும் நீதி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரபாகரனுடைய பிள்ளை பாலச்சந்திரனின் முதுகில் அல்லாமல் நெஞ்சிலே குண்டு பாய்ந்த அடையாளத்தை கண்டவுடன் அதிர்ந்து போனேன். என்னை அறியாமலேயே கண்ணீர் சிந்தி விட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.








