இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மகாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட,
கனடா பா.உ, தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே பா.உ, மொறிசியஸ் பிரதிநிதிகள், இந்திய நாட்டின் சார்பில் டாக்டர் கிருஸ்ணமூர்த்தி நடராஜன், கம்யூனிஸ்ட் கட்சியின் தா. பாண்டியன், கணேசமூர்த்தி பா.உ, லண்டன் பா.உ, அயர்லாந்து பிரதிநிதிகள், மலேசியா, இத்தாலி, பிரான்ஸ், குறிப்பாக தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் உலகின் முன்னணி ஊடகங்களான Raj, Al.jazeera, Messfgero, Lankasri பலவும் இங்கு கலந்து கொண்டுள்ளன.






























