சீன நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு கொழும்பு நகரில் உள்ள காணிகள் விற்கப்பட்டமைக்கு இந்தியா தனது எதிர்ப்பை நேரடியாக தெரிவித்துள்ளது.
கொழும்பு காலி வீதியில் உள்ள காணி பரப்பு ஒன்றை சீனாவின் ஓரு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் பாகிஸ்தானிலும் தமது கிளைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் இந்திய அரசாங்கம், இலங்கையின் வெளியுறவுகள் துறை அமைச்சுடன் தொடர்பை ஏற்படுத்தி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அண்மையில் அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, இது குறித்து நேரடியாக தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது.












