கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா இலங்கை வந்துள்ளதாக ஹிருனிகா பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்குப் புறம்பானது என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஹிருனிகா தெரிவித்திருந்த கருத்து குறித்து ஆராயப்பட்டபோது, துமிந்த சில்வா இலங்கை வரவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








