தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இரகசியம் அம்பலமாகியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு எதிரான சட்ட மூலம் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்தே அதிகளவான இலங்கைத் தமிழர்கள், அவுஸ்திரேலியா நோக்கிப் படையெடுத்து வருவதாகக் குறப்பிடப்படுகிறது.
இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு நான்கு புலி ஆதரவு அமைப்புக்கள், அந்நாட்டு செனட் சபையிடம் உதவி பெற்றுக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் 1300 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் படகு மூலம் கிறிஸ்மஸ் தீவை அடைந்து இனச்சுத்திரிப்பு, அரசியல் தஞ்சம் ஆகிய வசனங்களை மட்டும் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.












