சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது

July 19, 2012 0
சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் ஒருவர் கைது

சுமார் இரண்டு கோடி இலங்கை ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் இன்று காலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை வெலிகம பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க ஒருவரே ரூபா இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்துடன் சவூதி அரேபியாவிற்குச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.